மத்திய உளவுத்துறையின் தோல்வி வன்முறைக்கு வழி வகுத்தது!-டெல்லி கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து.

அண்ணாத்த🔥🔥🔥🔥

அண்ணாத்த🔥🔥🔥🔥

Posted by அன்பு தலைவர் ரஜினிகாந்த் on Wednesday, 26 February 2020

டெல்லி கலவரம் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்உளவுத்துறையின் தோல்வி வன்முறைக்கு வழி வகுத்தது, இது மத்திய அரசின் தோல்வியாகும், எனவே, நான் அதைக் கண்டிக்கிறேன். ஒன்று அவர்கள் வன்முறையைத் தடுக்க வேண்டும் (அல்லது) ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்ப்பு நடக்கலாம். ஆனால், அது காட்டு மிராண்டித்தனமாகமாறக் கூடாது. மதத்திலிருந்து அரசியலை உருவாக்குவது மிகவும் மோசமான விஷயம். 

நான் முன்பு கூறியது போல், எந்தவொரு முஸ்லீம்களும் CAA ஆல் பாதிக்கப்பட்டால், நான் முதலில் குரல் கொடுப்பேன்.

பல மூத்த நிருபர்களும், அரசியல்வாதிகளும் என்னை பா.ஜ.க. என்று முத்திரை குத்துகிறார்கள், அது என்னை வருத்தப்படுத்துகிறது. ஆனால், உண்மை என்ன என்பதை மட்டுமே நான் சொல்கிறேன். அமைதியை நாம் அனைவரும் விரும்புகிறோம்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN March 22, 2020 10:43 pm

Leave a Reply