விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர்!

ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, இன்று காலை ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக சேலம் சென்றார். அப்போது வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரமாக டேங்கர் வேன் ஒன்று கவிழ்ந்து, மூன்று பேர் விபத்தில் சிக்கி காயத்துடன் கிடந்துள்ளனர்.

உடனே ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, அவர்களை மீட்டு, தனது காரில் ஏற்றிக்கொண்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வரை அங்கு இருந்துள்ளார்.

சேலத்தில் இருந்து செப்டிக் டேங்க் சுத்தம் செய்து விட்டு சேலம் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், வேனில் பயனித்த மணிவாசகம் (வயது 32), மணிகண்டன் (வயது 30) ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும், சிவா (வயது 24) என்பவருக்கு கையில் தசை கிழிந்துள்ளதால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏற்காடு காவல் நிலைய போலிசார் தெரிவித்தனர்.

-நே.நவீன் குமார்.

 

One Response

  1. MANIMARAN February 19, 2020 3:56 pm

Leave a Reply