திருச்சி சஞ்சீவி நகர் அருகே முன்னால் சென்ற பைக் மீது லாரி மோதியது!

 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம், சஞ்சீவி நகர் அருகே இன்று மாலை 4 மணியளவில் முன்னால் சென்ற பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், பைக்கில் சென்றவருக்கு கால் பகுதியில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது இருச்சக்கர வாகனம் முழுவதுமாக சேதமடைந்தது.

விபத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், தன் மகளின் உதவியுடன் விபத்தில் சிக்கிய அந்த நபரை மீட்டு சாலை ஓரத்திற்கு கொண்டு வந்து, அருகில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து போலிசாரின் உதவியுடன், நெடுஞ்சாலை ரோந்து போலிசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலிசார், காயமடைந்த அந்த நபரை 108 ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த அந்த நபர் பெயர் சாம் விண்டோ ஜான், அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தற்போது
திருச்சி,சமயபுரம் அருகே உள்ள கிருஸ்துவ குருத்துவ கல்லுரியில் பாதிரியராக படித்து வருகிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

-டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN February 7, 2020 3:46 pm

Leave a Reply