ஏற்காடு மலைப்பகுதி அருகே சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு.!

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு செல்லும் கொண்டப்பநாய்க்கன்பட்டி மலைப்பாதையின் 5 ஆவது கொண்டை ஊசி வளைவை ஒட்டிய வனப்பகுதியில் மரம் ஒன்றில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியபடி இருப்பதாக ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர் மலைப்பாதை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் உள்ளே மரம் ஒன்றில் சடலம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எலும்பு கூடுகள் மட்டுமே இருந்த நிலையில், வயிற்றுக்கு கீழ்பகுதி தனியாக கீழே கிடந்தாலும், அவர் அணிந்திருந்த பேன்ட் மற்றும் சட்டைகள் அதிகளவில் நஞ்சி போன நிலையில் இருந்ததால், உயிரிழப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அருகில் வயது முதிர்ந்தவர்கள் பயன்படுத்தும் கைத்தடி இருந்ததையொட்டி இறந்தவர் முதியவர் என்றும், கருதி, சமீபத்தில் காணமால் போன வயது முதிர்ந்தவர்கள் விபரங்களை திரட்டி, ஏற்காடு போலீசார் விசாரணையை துவக்க உள்ளனர்.

நே.நவீன் குமார்.

 

One Response

  1. MANIMARAN November 13, 2019 12:28 pm

Leave a Reply