விபத்துக்குள்ளான முதியவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்!

மேற்காணும் காணும் முதியவா் 29.07.2019 – அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி திருவெறும்பூர் முனீஸ்வரன் கோவில் அபிநயா ஹோட்டல் அருகில் திருச்சிதஞ்சாவூா் சாலையை நடந்து கடக்க முயற்சி செய்தபோது, தனியார் பேருந்து (மஹாலெஷ்மி பேருந்து) மோதி விபத்துக்குள்ளானதாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

சிகிச்சையில் இருந்து வரும் இவரால் வாய்பேச முடியாமல் சுயநினைவின்றி இருந்து வந்தவர் தற்போது சற்று மயக்கம் தெளிந்த நிலையில் தன் பெயா் கேசவன் என்றும், ஊர் மாரியம்மன் கோவில் தெரு, ஆத்துக்குறிச்சி, ஜெயங்கொண்டம் என்றும், மனைவி இறந்துவிட்டதாகவும், மூன்று மகன்கள் உள்ளதாகவும் கூறுகிறார். மற்ற விவரம் அவரால் கூறமுடியவில்லை.

எனவே, இதுகுறித்து அரியலூர் மாவட்ட  ஆட்சித்தலைவருக்கும், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், நமதுஉள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளார்இவரைப் பற்றிய தகவல் அவரது உறவினர்களுக்கு விரைவில் சென்றடையும்.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply