டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக முதலமைச்சர்!

நிடி‘ ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, 90 பக்கங்கள் அடங்கிய தமிழகத்தின் கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோதியிடம், முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

மேலும், மத்திய நிதித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை நேரில் சந்தித்து  பேசினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply