சேமித்து வைத்திருந்த ரூ.10,000/- பணத்தை ஃபானி புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமிகள்!

ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஒடிசா மாநிலம், பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த  3-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மணிசரணி பத்ஹான் மற்றும் லிப்சரணி பத்ஹான் என்ற இரண்டு சிறுமிகள், ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தாங்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.10,000/-பணத்தை, ஒடிசா மாநில முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பர்கர் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

-துரை திரவியம்.

Leave a Reply