திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் பயணிகள் பேருந்து நிழற்குடை திறப்பு விழா!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில், பயணிகள் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று காலை 10.37 மணியளவில் மேலபுதுரில் நடைபெற்றது. ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் சீரமைக்கப்பட்ட பேருந்து பயணிகள் நிழற்குடையை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன் திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதியும் கலந்துக் கொண்டார்.

இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, திருச்சி மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அதிகாரி N.ரவிச்சந்திரன்திருச்சி மாநகர காவல் ஆணையர் A.அமல்ராஜ், திருச்சி மாநகர துணை காவல் ஆணையர் (Crime / Traffic) மயில்வாகணன், திருச்சி மாநகர துணை காவல் ஆணையர் (சட்டம்/ஒழுங்கு) நிஷா, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகத்தினரும்பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாநகர காவல் துறையினரும் சிறப்பாகச் செய்து இருந்தனர்.

                                                                                                   கே.பி. சுகுமார்.

    

 

                      

2 Comments

  1. K.venkataraman January 19, 2019 6:29 pm
    • admin January 19, 2019 10:27 pm

Leave a Reply