புதிதாகக் கட்டப்பட்ட கிளியூர் பாலத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கிளியூர் கிராமத்தில் கல்லணை கால்வாய் ஆற்றில் பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டிக்கொடுக்கும்படி, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்ட மன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து புதிய பாலம் அமைக்க தமிழக அரசு 2 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட கிளியூர் பாலத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டார்.

மேலும், கடந்த 2017 – 2018-ம் நிதி ஆண்டின் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் அய்யம்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட சீரணி அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  திறந்து வைத்தார்.

இந்நிலையில், பனையக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஏ.ஆர்.கே.நகர் மற்றும் சர்க்கார்பாளையம், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் பம்பினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply