துன்பமடா ரங்கநாதா! -திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வந்த சோதனை!-சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ஆய்வு!

திருச்சி தீவு நகரமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் சிலை சேதம் அடைந்திருப்பதாகவும், சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ரங்கராஜன் நரசிம்மன்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி ராஜாராம் உள்ளிட்டோர் சக்கரத்தாழ்வார் சன்னதி, மூலஸ்தானம் உள்பட பல இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தேசத்தில் தீமை நடந்தால் தெய்வத்திடம் முறையிடலாம்; தெய்வமே திருடப்பட்டால் யாரிடம் முறையிடுவது?!

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply