திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரிய ஏரியில் உள்ள சங்கரன் குழுமியின் அவலநிலை!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், கூத்தைப்பார் பெரிய ஏரியில் உள்ள சங்கரன் குழுமி, கடந்த 25 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதுக்குறித்து பொதுப்பணித்துறையினரிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 3 மாதங்களாக தண்ணீர் வருவதற்குள் குழுமியை சரிசெய்து கொடுங்கள் என்று விவசாயிகள் சார்பில் முறையிட்ட போது, குழுமியை புதிதாகக்கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் சரி செய்வோம் என்று சொன்னார்கள். தற்போது பொதுப்பணித்துறையினரை அணுகி கேட்ட போது இந்த ஆண்டு முடியாது, அடுத்த ஆண்டு பார்ப்போம் என்று வழக்கமான பதிலைக் கூறுகிறார்கள்.

இதனால் 300 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சங்கரன் குழுமியில் மதகு அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply