திருச்சி காவிரி பாலத்தில் பெண் அதிகாரி பயணம் செய்த ஜீப் மீது லாரி மோதியது!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி காவிரி ஆற்று பாலத்தில், இன்று (18.07.2018) மாலை 3.50 மணிக்கு, திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்த பெண் அதிகாரி பயணம் செய்த தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான TN-45-AE 3951 என்ற வாகனத்தின் பின்பகுதியில், பின்தொடர்ந்து அதிவேகமாக வந்த TN-72-AC 8521 என்ற லாரி எதிர்பாரதவிதமாக மோதியதில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஜீப் பின்பகுதி சேதமடைந்தது. இதில் அரசு வாகனத்திற்குள் இருந்த பெண் அதிகாரி ஒருவரும், ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட போலிசார், விபத்து குறித்து விசாரணைச் செய்து வருகின்றனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply