ஈரானில் சிக்கி தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்ற கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 21 தமிழக மீனவர்கள் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர்.

அங்கு மீனவர்களுக்கு உரிய சம்பளம் தராமல் உரிமையாளர்கள் விரட்டிவிட்டுள்ளனர். ஈரானுக்கு அழைத்து சென்றவர்கள், மீனவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துள்ளனர். 

எனவே, இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவை தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply