துவரங்குறிச்சி அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார்!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலம்பட்டி அருகே, நேற்று  காட்டு பகுதிக்குள் இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமான முறையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் கபூர் தலைமையிலான போலிசார், புழு வைத்து கிடந்த அந்த பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் கபூரிடம் இன்று விசாரித்தோம், பிணமாக  மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் ஊர் விபரம் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் இவர் எப்போது கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரிய வரும். சடலத்தை வைத்து பார்க்கும்போது சுமார் 40  அல்லது 50 மணி நேரங்களுக்கு முன்பு இவர் இறந்து இருக்கலாம் என்றார்.

இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு (F.I.R. NO: 70/2018) செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 

-மு.துளசிமணி.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply