வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வளைத்து பிடித்த காவல் துறையினர்!

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம்

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் காவல் துறை அதிகாரிகள்

கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த 07.05.2018 அன்று கொள்ளை நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் துறையின் தீவிர புலன் விசாரணையில்  நான்கே நாட்களில் வங்கி கொள்ளையில் ஈடுப்பட்ட  கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் தலைமையில் இதுவரையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் தூத்துக்குடியை சேர்ந்த மரிய செல்வம் தலைமையில் அவரது கூட்டாளிகளான சுடலைமணி, மீரான் மைதீன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.  டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி தலைமையில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் திருடிச்சென்ற ரொக்கப்பணம் , 84 கிராம் தங்கம், டி.வி.டி மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகள், இரண்டு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான  விசாரணை நடைபெற்று வருகிறது.

-ஜி. ரவிச்சந்திரன்.

 

2 Comments

  1. G Ramachandram May 12, 2018 9:35 pm
  2. G Ramachandram May 12, 2018 9:38 pm

Leave a Reply