திருச்சி, துவாக்குடி அருகே கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மேடையின் மேற்கூரை சரிந்து விழுந்தது! – மறைக்கப்பட்ட உண்மைகள்!- வீடியோ.

திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, துவாக்குடி மலை தெற்கு, காமராஜர் வளைவு, முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி 09.05.2018 அன்று இரவு நடைபெற்றது. அப்போது, போதிய பாதுகாப்பின்மை காரணமாக மேடையில் நடனக் கலைஞர்கள் ஆடிக் கொண்டிருக்கும்போதே மேற்கூரை சரிந்தது.  

மேடையின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் மேடையிலிருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்த தகவல், வெளிவராமல் மறைக்கப்பட்டுவிட்டது. துவாக்குடி காவல் துறையினர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உரிய விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply