நமது “உள்ளாட்சித் தகவல்” செய்தி எதிரொலி! விவசாயிகளின் நலன் கருதி மே 14 முதல் மே 19 வரை சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் அணையிலிருந்து நீர்வரத்து நிறுத்தப்பட்டால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது என்று, கடந்த 06.05.2018 அன்று நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

http://www.ullatchithagaval.com/2018/05/06/34288/

அச்செய்தியை விவசாயிகளின் நலன் கருதி நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி அவர்களின் கவனத்திற்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி மே 14 முதல் மே 19 வரை சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால் சாத்தனூர் அணைக்கட்டு விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-கே.பி.சுகுமார், செங்கம் சரவணக்குமார்.

One Response

  1. k.venkataraman May 10, 2018 10:50 pm

Leave a Reply