மு.க. ஸ்டாலின் தலைமையில் மேலணை முதல் கல்லணை வழியாக கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு நடை பயணம்!-வீடியோ.

தமிழக எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மேலணை முதல் கல்லணை வழியாக கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு நடை பயணம் இன்று துவங்கியது.

இந்நிலையில், 9-ந்தேதி அரியலூரில் இருந்து பயணத்தை தொடங்கும் மற்றொரு குழுவினர், வரும் 12-ந் தேதி கடலூர் சென்றடைகின்றனர். இதையடுத்து 13-ந்தேதி காலை கடலூரில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.  அதன்பின் அங்கிருந்து கார் மூலம் புறப்படும் இவர்கள், சென்னை ஆளுநர் மாளிகைக்கு சென்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

-ஜி.மகேந்திரன், மா.நந்தகுமார். 

Leave a Reply