பெருங்கதைக்கு, சிறுகதைகள் வாழ்த்து…!

நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான “பத்ம விபூஷன்” விருது உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், ஊடக அன்பர்கள் அனைவரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் ராஜா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இளையராஜாவின் இசை வாரிசுகளான (மகள் மற்றும் மகன்கள்) கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா ஆகியோர், தன் தந்தையும், குருவுமான இளையராஜாவுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். பெருங்கதைக்கு, சிறுகதைகள் வாழ்த்து தெரிவித்துள்ளது உண்மையிலுமே பெருமையான விசியம்தான்.

தன் தந்தையே தங்களுக்கு குருவாக அமைந்திருப்பது, அவர்கள் உண்மையிலுமே கொடுத்து வைத்து பிறந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply