பொது இடங்களை ஆக்கிரமிக்கும் பிளக்ஸ் பேனர்கள்!

தஞ்சை–திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொரடாச்சேரி டவுன் பஞ்சாயத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை எங்கிருக்கிறது? என்றே தெரியாத வண்ணம் பிளக்ஸ் பேனர்கள் வைத்து மறைத்துள்ளனர்.   

இதனால், பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த முடியாமல் சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

பொதுமக்களையும், போக்குவரத்தையும் பாதிக்கும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியைதான் உருவாக்கும்.

சம்மந்தப்பட்டவர்கள் இதை உணர்வார்களா?

-க.குமரன்.

Leave a Reply