பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திருச்சி ஈ.வெ.ரா. அரசு கல்லூரி மாணவர்கள் 2- வது நாளாக போராட்டம்!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, ஈ.வெ.ரா அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை பழைய கட்டணத்திற்கு மாற்றவேண்டும் என்று 2-வது நாளாக இன்று காலை முதல்  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதை தொடர்ந்து மதியம் மூன்று மணிக்கு மேல் கல்லூரி நுழைவு வாயில் முன் அனைத்து துறை மாணவ, மாணவிகளும் இணைந்து, தமிழக அரசை கண்டித்து மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூறினார்கள்.

-ச.ராஜா.
-ரா.ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply