பயணியர் நிழற்குடை மற்றும் குடிநீர் தொட்டிகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்  பொ.மகேஷ் திறந்து வைத்தார்.

திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநராட்சி 7-வது வார்டு பகுதியான மஹலெட்சுமி நகரில், பொது மக்கள் பயன்பாட்டிற்கு திருச்சி – தஞ்சை சாலையில் பயணியர் நிழற்குடை வேண்டி அப்பகுதி பொதுமக்கள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்  பொ.மகேஷிடம் கோரிக்கை விடுத்துவந்தனர்.

அதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்  பொ.மகேஷ், தனது தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.5.லட்சம் ஒதுக்கீடு செய்து பயணியர் நிழற்குடை அமைத்து கொடுத்தார். அதனை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததோடு இல்லாமல், இந்த பகுதி பொது மக்களின் பல்வேறு பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர், 27-வது வார்டு பொது மக்களின் கோரிக்கையான குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில் கோவிந்த கோனார் தெரு, குமரன் நகர், வள்ளுவர் நகர், அண்ணா நகர், செந்தணீர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் தலா ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் மினி சின்டெக்ஸ் டேங்குடன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply