தர்மபுரி மாவட்டம், சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த சுந்தராஜன் மகன் சக்தி (வயது 21) என்பவரும், வாச்சாத்தி பகுதியை சேர்ந்த செவ்வந்தி (வயது 20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் பைக்கில் ஏற்காடு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் ஏற்காட்டின் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு சேர்வராயன் குகை கோவிலுக்கு செல்லும் வழியில் மயக்கமான நிலையில் கிடந்துள்ளனர். அவர்களுக்கு அருகில் வாழைப்பழம் பழுக்க வைக்கும் மருந்து பாட்டில் கிடந்துள்ளது.
அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததால், விரைந்து வந்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் ஏற்காடு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விஷம் அருந்தியதை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி செவ்வந்தி இறந்துவிட்டார். சக்திக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-நவீன் குமார்.