தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது அணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க. அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இடதுசாரிகள், ம.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார். இன்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பின் போது, மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு வாசனுக்கு, அனைவரும் அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.