யானைகளின் வயிற்றில் செரிமானம் ஆகி வெளியேறும் காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பிளாக் ஐவரி காபி!

elephant13 ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? elephants1.jpg2 elefantenmagentelephants1.jpg3

வெளிநாட்டுப் பயணிகளைக் கவர தாய்லாந்து ஹோட்டல்களில் பிளாக் ஐவரி காபி (Black Ivory Coffee) வழங்கப்படுகிறது.

இந்த பிளாக் ஐவரி காபி, ஒரு கோப்பை 50 அமெரிக்க டொலர் என விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ அளவில் வாங்க வேண்டும் என்றால், 1100 அமெரிக்க டொலர்களை நீங்கள் செலவிட வேண்டும்.

இந்த காபியின் தயாரிப்பு முறை மிக விநோதமானது. தாய்லாந்தில் யானைகளை வாங்கி வளர்த்து அவற்றுக்கு அன்றாட உணவில் வாழைப்பழம், அரிசிச் சோறுடன் காபி பழங்களையும் சேர்த்து அளிக்கின்றனர்.

யானைகளின் வயிற்றில் செரிமானம் ஆகி வெளியேறும் கழிவில் கலந்து வரும் காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூடான காபி இதுவாகும்.

இந்த பிளாக் ஐவரி காபியை தாய்லாந்து கோல்டன் டிரையாங்கில் நிறுவனம் தயாரிக்கிறது. கனடாவைச் சேர்ந்த இதன் நிறுவனர் பிளேக் டின்கின் கூறியதாவது,

மக்களுக்கு வித்தியாசமான தரமிக்க, அதேசமயம் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் காபியை தயாரிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வந்தேன்.

முதலில் பூனை இடும் கழிவுகளிலிருந்து காபியை தயார் செய்து குடித்தபோது அதன் சுவை திருப்தி அளிக்கவில்லை. பின்னர், சிங்கம், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் கழிவுகளிலிருந்தும் காபியை தயாரித்தோம். ஆனால், அது நாங்கள் எதிர்ப்பார்த்த சுவையுடன் இல்லை என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். பின்னர், யானைகள் இடும் கழிவிலிருந்து காபி கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்தி அதன் மூலம் காபி தயாரித்தபோது அதன் சுவை மிகவும் பிடித்துப்போனது.

அதாவது யானைகள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், அரிசி வகைகள் மற்றும் காபி கொட்டைகளை அன்றாடம் உண்டு வருகிறது. இவை அனைத்தும் யானையின் வயிற்றிற்குள் சென்று செரிமானம் ஆகிறது.

பிறவகை உணவுகளுடன் இணைந்து குடல் வழியாக செல்வதால், காபி கொட்டைகளுக்கு கூடுதல் சுவை கிடைக்கிறது. மேலும், வயிற்றில் உற்பத்தியாகும் செரிமான திரவம் காபி கொட்டையில் உள்ள கசப்பு தன்மையை முழுவதுமாக நீக்கி விடுகிறது. யானையின் வயிற்றிற்குள் சுமார் 17 மணி நேரம் நிகழும் இந்த செரிமான முறைக்கு பின்னர், அந்த உணவு கழிவாக வெளியேறுகிறது. இந்தக் கழிவை சேகரித்து அவற்றிலிருந்து கொட்டைகளை மட்டும் தனியாகப் பிரிப்பதற்கு என ஒரு குழு உள்ளது. அவர்கள் அவற்றை தனியாக பிரித்து வெயிலில் போட்டு உலர்த்தி தரமான காபிக்கு தயார் படுத்துவார்கள்.

blackivorycoffee_washing

Black-Ivory-Elephant-

பின்னர், 19-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு காபி இயந்திரத்தின் உதவியுடன் பிளாக் ஐவரி கோப்பி தயாரிக்கப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு வரும் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக இந்த காபி அமைந்துள்ளது என்றார்.

-ஆர்.மார்ஷல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற முயற்சி செய்வது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையாகும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, ஜெ.ஜெயலலிதா  கடிதம்!

 

 

பிரதமர் நரேந்திர மோதிக்கு

 

 

 

புதிய முல்லைப் பெரியாறு

 

கேரள அரசு அணை கட்டும் முயற்சியை தடுப்பது தொடர்பாக, அமைச்சர்களுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா  ஆலோசனை.

 

 

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற முயற்சி செய்வது முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா  இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற முயற்சி செய்வது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையாகும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.

 

முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் இருப்பதாக கடந்த 7.5.2014 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் கேரளா மீண்டும் அங்கு புதிய அணை கட்ட முயற்சி செய்வது கடும் கண்டனத்துக்குரியது.

 

சுப்ரீம் கோர்ட்டு 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கேரளா மனு செய்திருந்தது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு 2.12.2014 அன்று தள்ளுபடி செய்து விட்டது. எனவே, முல்லைப் பெரியாறு விவகாரம் முடிந்து விட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை மீறி கேரள மாநில அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டும் அனுமதியை பெற்று விட முயல்கிறது.

 

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு ஒரு மனு செய்துள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் நடக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்காக அனுமதி கேட்டு கேரளா விண்ணப்பித்த பரிந்துரையை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கூட்டம் ஒன்றில் பரிசீலனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், புதிய ஆணை கட்டுவதற்காக கேரளாவுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என்று    4–6–2015 அன்று தகவல் வெளியானது.

 

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட ஆய்வு நடத்த வேண்டுகோள் விடுப்பதும், அதை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் பரிசீலிப்பதும், சுப்ரீம் கோர்ட்டின் 7–5–2014 தீர்ப்புக்கு எதிரானது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையே மீறும் செயலாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உண்மையில் கேரளாவின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்யக்கூடாது. கேரளாவின் ஆய்வு கேட்கும் பரிந்துரையை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.

 

இந்த சூழ்நிலையில் தாங்கள் இந்த விவகாரத்தில், தனிப்பட்ட முறையில் தலையிட்டு, எதிர்காலத்தில் கேரளாவின் இத்தகைய பரிந்துரை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த ஆலோசனையும் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். மேலும் கேரளாவின் பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பவும் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமது  கடிதத்தில் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ளார்.