நேபாளத்தில் நிலநடுக்கம்: 2,500-க்கும் மேற்பட்டோர் பலி!- இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர்  படுகாயம்…!

nepal earthquake.jpg7nepal earthquake
nepal earthquake.jpg3

nepal earthquake.jpg1

nepal earthquake.jpg10

nepal earthquake.jpg11

nepal earthquake.jpg12

nepal earthquake.jpg6
nepal earthquake.jpg8 nepal earthquake.jpg9 nepal earthquake.jpg10 nepal earthquake.jpg11 nepal earthquake.jpg12 nepal earthquake.jpg14

நேபாளத்தில் இன்று (25.04.2015) காலை  11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.9 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்திற்கு 2500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி  படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் உயிர் இழப்பின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். சுற்றுலா சென்றவர்களும் அங்கு உள்ளனர். அவர்களில் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ளவர்கள், நேபாளத்தில் உள்ள உறவினர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அவரசக்கால உதவி மையம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

Document2

இந்தியாவில் உள்ள உறவினர்கள் +9779851135141, +9779851107021 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்திய அரசு தேசிய அவசரக்கால உதவி மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் 0097714200257, 009771420105 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில்  நடைப்பெற்ற அவசரக்கால ஆலோசனைக்  கூட்டம்.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைப்பெற்ற அவசரக்கால ஆலோசனைக் கூட்டம்.

நேபாள நிலநடுக்கம் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திரமோதி தலைமையில், அவசரக்கால ஆலோசனைக் கூட்டம் இன்று (25.04.2015) நடைப்பெற்றது.

 -எஸ்.சதிஸ் சர்மா.