பிரபல ரவுடி பத்தர் செல்வம் படுகொலை! தி.மு.க. பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக பத்தர் செல்வத்தின் மனைவி காவல்துறையில் புகார்!

murder

murder.jpg3

murder.jpg2murder.jpg1murder.jpg4

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பத்தர் செல்வம், இன்று (21.04.2015)  காலை நகராட்சி பூங்காவில் கார்க் விளையாடி விட்டு வீடு திரும்பும்போது கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது  தலை காந்தி சிலையருகே போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த கொலையை செய்ததாக அறிவழகன் என்பவர் காவல்துறையில் சரண் அடைந்திருக்கிறார்.

ரவுடி பத்தர் செல்வம், கட்டப்பஞ்சாயத்து, முக்கிய புள்ளிகளை மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வேலைகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் இவருக்கு பலவகையில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

பத்தர் செல்வம் ஏற்கனவே பணம் கேட்டு மிரட்டிய விழுப்புரத்தைச் சேர்ந்த தி.மு.க. முக்கிய பிரமுகர்தான் தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டிருப்பதாக பத்தர் செல்வத்தின் மனைவி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், ரவுடி மின்னல் ராஜா, ரவுடி ஆர்.கே.சிவா, அண்ணா கலைக்கல்லூரி மாணவர் தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டதில் பத்தர் செல்வம் முக்கிய புள்ளியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரவுடி பத்தர் செல்வம் கொலையில் இன்று காவல்துறையில் சரண் அடைந்திருக்கும் அறிவழகன், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரவுடி ஆர்.கே.சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

பழிக்குபழி வாங்கும் உணர்வும் தான் இந்த படுகொலைக்கு காரணம் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in