முதல் மந்திரிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு! –படங்கள்.

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

புதுடெல்லியில் முதல் மந்திரிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று (05.04.2015) நடைபெற்று வருகிறது.

மத்திய சட்டத்துறை அமைச்சகம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. சட்டத்துறை எதிர்கொள்ளும் நிர்வாக பிரச்சினைகள், வழக்கு தேக்கம் மற்றும் அவற்றை விரைவில் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் பேசப்படுகிறது.

இம்மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டுள்ளார்.

நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, எனக்கு இந்த மாநாடு குறித்து நன்றாகவே தெரியும்,

முன்னதாக நான் அந்த வரிசையில் அமந்து இருந்தேன். இன்று இங்கு அமர்ந்து உள்ளேன். இம்மாநாட்டின் யோசனைகள் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும், ஒருவருக்கொருவர் வலுப்படுத்துவது ஆகிறது, இந்தியாவின் கரத்தை வலுப்படுத்தும்.

இதுபோன்ற மாநாட்டில் ஏற்கனவே பேசியவற்றை நான் மீண்டும் கூறுவதற்கு விரும்பவில்லை.

எல்லா மாநாட்டிலும் அமர்ந்து இருக்கும் ஒவ்வொருவரும், ஊழல் விவகாரம் தொடர்பான கவலையை எழுப்புகின்றனர். ஒவ்வொருவரும் கவலை அடைந்து உள்ளனர்,

ஆனால், இதுவரையிலும் தீர்வு காணப்பட முடியவில்லை. இது சாத்தியமாகும், இந்த மாநாட்டால் தீர்வு காணப்படமுடியும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு துறையில் உள்ளவர்கள் தெய்வீகமான பணியினை ஆற்றுகின்றனர். கடவுள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் செய்கிறீர்கள். கடவுளுக்கு அடுத்தப்படியாக வைத்து மதிக்கப்படுபவர்கள் நீதிபதிகள், புனிதமான பணியினை செய்பவர்கள் நீதிபதிகள்.

சட்டம் ஒழுங்கு துறையில் உள்ள மக்கள் பொறுப்பு கொண்டுள்ளனர், அவர்கள் மற்ற மக்கள் பார்க்கக்கூடியவர்கள். நீதிதுறையின் மீது மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்து உள்ளனர். 

ஏழைகளுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை நீதித்துறை கையாளவேண்டும்

நாம் சட்டம் மற்றும் ஒழுங்கை கொண்டு உள்ளோம், மனிதவளமும் கொண்டு உள்ளதில் நாம் அதிர்ஷ்டசாலி ஆவோம். தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து ஜி, தரமான மனிதவளம் குறித்து பேசினார். எதிர்வரும் வருடங்களில் இந்ததுறையில் இதனை பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். 

-எஸ். சதிஸ்சர்மா.