இறுதி யுத்தத்திற்குப் பிறகு இலங்கை இராணுவத்தினருடன், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் ! (படம்)

bikramsingh_vavunia

          இலங்கையில் நடந்த யுத்தம் உள்நாட்டு விவகாரம் என்றும், இவ்விசயத்தில் இந்தியா, எக்காரணத்தை முன்னிட்டும் தலையிட முடியாது என்றும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் மற்றும் வெளியுறவுத்துறையும் தொடர்ந்து சொல்லி வருகிறது. அப்படி இருக்கும் போது இந்திய இராணுவ தளபதி பிக்கரம் சிங் இறுதி யுத்தத்திற்கு பிறகு 21 டிசெம்பர் 2012 வெள்ளிக்கிழமை இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு இலங்கை இராணுவத்தளபதிகளுடன் யுத்தம் நடந்த பகுதிகளுக்கு சென்றுள்ளார்.

         இந்திய இராணுவத்தளபதியாகிய இவருக்கு இலங்கையில் என்ன வேலை? எதற்காக இவர் அங்கு சென்றார்? மேற்காணும் புகைப்படத்தில் இலங்கை இராணுவ வீரர்கள் சுற்றிலும் சூழ்ந்திருக்க, இந்திய இராணுவத்தளபதி பிக்கரம் சிங் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பெண் யார்?. இப்போது அந்த பெண் எங்கு இருக்கிறார்? என்று இந்திய இராணுவத்தளபதி பிக்கரம் சிங் தான்  விளக்கம் அளிக்க வேண்டும்.

– கே.பி.சுகுமார்

genvikransingh

இந்திய இராணுவ தளபதி பிக்கரம் சிங்

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply