ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உற்சவத்தில் பிரேத ஊர்தி குறுக்கீடு: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு!

Sri_Ranganathar_Swamy_Temple_main_gopuram-_Srirangamsrirangam

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் உற்சவம் நடந்து வருகிறது. இதில் மாசி 3-ம் திருநாளான  அம்மா மண்டபம் மண்டப படி 15.02.2013 அன்று காலை 8 மணியளவில் நடந்தது. அப்போது உற்சவம் பெருமாள் வீதி உலா சென்ற போது,  மங்கம்மா நகர் அருகே  ஆம்புலன்ஸ் ஒன்றில் இறந்தவர் சடலம் எதிர் கொண்டு வந்ததால்,  பெருமாளை மறுபடியும் கோவிலுக்கு  எடுத்து சென்று திருமஞ்சனம் செய்து, அன்று பகல் 02.30 மணியளவில் யாகசாலை ஹோம ஆவர்த்தி செய்து மறுபடியும் உற்சவத்திற்கு தயார் செய்தனர்.

  இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைதுள்ளனர். இது போல் ஸ்ரீரங்கம் வரலாற்றில் நடந்தது இல்லை. பெருமாளுக்கு முன்பாக பாதுகாப்புக்கு செல்ல வேண்டிய போலிஸ்காரர்கள் எங்கே சென்றார்கள்? ஆகமவிதிப்படி நாட்டின் தலைவருக்கு ஆபத்து என்று பக்தர்கள் புலம்புகிறார்கள். அரங்கநாதருக்கே இந்த நிலைமையா?

ஸ்ரீரங்கத்திலிருந்து – கோ.லெக்ஷ்மிநாராயணன்.

Leave a Reply