திருப்பதியில் ராஜ பக்சே வாகனத்தை சுற்றி வளைத்த ம.தி.மு.க.வினர்!

 rajapakse-mdmk-protest-tirupathi

இலங்கை அதிபர் ராஜபக்சே , டெல்லியில் ஏற்கனவே  மதிமுகவின் போராட்டத்தால் அங்கு செல்லாமல் அவர் பயண திட்டத்தை மாற்றினார் .

மாற்றிய பயண திட்டத்தின் பிரகாரம் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் திருப்பதி வந்து திருமலை சாமி தரிசனம் பெற்று சென்று விடலாம் என்ற அளவில், அவரது நிம்மதியான  பிரயாணத்திற்காக ,  அவர் செல்லும் பாதையெல்லாம்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அவர் வருவதிற்கு முன்னரே கிட்டத்தட்ட  இரண்டாயிரம் ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

TPARRHI-W1கடைசியில் சட்ட கொடூரமாக , தமிழ் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இதை எல்லாவற்றையும் மீறி , ரேணிகுண்டாவில் இருந்து விமானத்தில் இறங்கி திருமலை   பத்மாவதி தாங்கும் இல்லம் நோக்கி விரைந்த ராஜபக்சேவின் காரை , ம.தி.மு.க.வினர் 200 பேர்  திடீர் என்று சாலையில் தோன்றி வண்டியை மறித்தனர் .

இதனால் பதட்டம் அடைந்த ஒட்டுமொத்த இலங்கை அதிபரின் பாதுகாப்பு குழுவும் , ராணுவமும் ம.தி.மு.க.வினரை சுற்றி வளைத்தனர் , இடையில் இந்த பதற்றத்தில் ராஜபக்சேவின் வாகனம்  25 நிமிடம் அந்த இடத்திலேயே நின்று தாமதமாக புறப்பட்டது.

பின்னர் , போராட்டத்தில் ஈடுபட்டோரை ராணுவத்தினர், திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .

Leave a Reply