இலங்கை வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால், வங்காலை நாரபாடு கடல் பகுதியில், சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன் பிடிக்க பயன்படுத்திய படகுகள் மற்றும் 500 மீட்டர் நீளமான சட்ட விரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் பொருட்கள் ஆகியன சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துணை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-வினித்.
