ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சரக்கு கையாளுதலைப் பதிவு செய்து, பாரதீப் துறைமுக ஆணையம் (PPA) 2026 ஆம் ஆண்டை ஒரு மைல்கல் சாதனையுடன் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் துறைமுகம் 14.44 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாண்டது, இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டப்பட்ட 14.32 MMT என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.
இந்த சாதனை செயல்திறன், இந்தியாவின் முன்னணி பெரிய துறைமுகங்களில் ஒன்றாக பாரதீப் துறைமுகத்தின் நிலையை வலுப்படுத்துகிறது மற்றும் அதன் செயல்பாட்டு திறன்களில் நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இந்த சாதனை நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாடு, நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் முனையங்கள் மற்றும் பங்குதாரர்களிடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் விளைவாகும்.
சரக்கு அளவுகளில் தொடர்ச்சியான அதிகரிப்பு, பரதீப் துறைமுகத்தில் பணியாளர்களின் செயல்திறன், மீள்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகரித்து வரும் தேவை மற்றும் கடல்சார் தளவாடங்களில் சிக்கல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து வலுவான செயல்பாட்டு முடிவுகளை வழங்குகிறார்கள்.
பாரதீப் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு. பி.எல். ஹரநாத், இந்த மைல்கல்லை அடைய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவாலின் மூலோபாய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் துறைமுகத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் இடைவிடாத முயற்சிகள் காரணமாகக் கூறினார்.
“நவீனமயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் செயல்பாட்டு சிறப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம், பாரதீப் துறைமுகம் இந்தியாவின் வளர்ந்து வரும் வர்த்தகத்தை ஆதரிப்பதற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
உலகத் தரம் வாய்ந்த மெகா துறைமுக அந்தஸ்தை அடைவதற்கான பயணத்தை பாரதீப் துறைமுகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், ஜனவரி மாத சாதனை செயல்திறன் வரவிருக்கும் ஆண்டிற்கு ஒரு நேர்மறையான தொனியை அமைக்கிறது.
திவாஹர்
