மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 14, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம், டிரினிடாட் – டொபாகோ, ஆஸ்திரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை வழங்கினர்.

தங்கள் நியமனப் பத்திர ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:

1. திரு. சந்திரதத் சிங், டிரினிடாட் – டொபாகோ தூதர்

2. டாக்டர் ராபர்ட் ஜிஷ்க், ஆஸ்திரிய தூதர்

3. திரு. செர்ஜியோ கோர் – அமெரிக்க தூதர்

Leave a Reply