இலங்கை கடல் எல்லையில் நெடுந்தீவு கலங்கரை விளக்கத்துக்கு வடமேற்கு திசையில் சுமார் 13.6 கடல் மைல்கள் தூரத்தில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இருந்து 02 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
