இலங்கை கடற்படையினருக்கு வந்த ரகசிய தகவலின்படி, இலங்கை வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2,089 நட்சத்திர ஆமைகளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நட்சத்திர ஆமைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
-என்.வசந்த ராகவன்.
