முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு தில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தில்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடல்நல குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்நிகழ்ச்சில் பங்கேற்கவில்லை.
-கே.பி.சுகுமார்.