செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
இதற்கான எழுத்துப்பூர்வமானப் பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுப்பியதை அடுத்து இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
பதவியேற்பு விழா 28. 04. 2025 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் மற்றும் அமைச்சரவையில் இடம் பெற இருக்கும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை சற்று முன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2024/01/13/94427/
https://www.ullatchithagaval.com/2025/04/09/108398/
https://www.ullatchithagaval.com/2025/04/11/108479/