திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்த ஒரு மாத கால தொடர் நடவடிக்கைகளை இறுதி செய்வது தொடர்பாக விவாதிப்பதற்காக உதம்பூர்-கதுவா-தோடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமானடாக்டர் ஜிதேந்திர சிங், இன்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புராவில் “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேளாண் உற்பத்தி திட்டத்தை” மத்திய வேளாண் அமைச்சருடன் இணைந்து தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மண்டலத்தையும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆயுஷ்மான் பாரத் போன்ற முதன்மைத் திட்டங்கள் 100% நிறைவுற்றிருப்பதை வலியுறுத்தி, அனைத்துப் பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அறிவியல் சார்ந்த விவசாயத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், பிராந்தியத்தின் விவசாயப் பொருளாதாரத்தை மறுவடிவமைக்கும் தொடர்ச்சியான மாற்றத்தக்க முயற்சிகளை எடுத்துரைத்தார். கதுவாவில் உள்ள பயோடெக் தொழில்துறை பூங்கா செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பயோடெக் வேளாண் தொகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும், இது புதுமை மற்றும் விவசாயி-விஞ்ஞானி ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்