உருவகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நிலைகளின் கீழ் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப சாதனங்களின் சோதனைகளை இந்திய இராணுவம் நடத்துகிறது.

இந்திய இராணுவம் தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் விரிவான திறன் மேம்பாட்டு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது, இதில் பொக்ரான் கள துப்பாக்கிச் சூடு தளங்கள், பாபினா கள துப்பாக்கிச் சூடு தளங்கள் மற்றும் ஜோஷிமத் ஆகியவை அடங்கும், மேலும் ஆக்ரா மற்றும் கோபால்பூரில் பிரத்யேக வான் பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகளை சோதித்துப் பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கள சோதனைகள் போர் நடைபெறும் சூழலில் நடத்தப்படுகின்றன. அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கடும் சோதனைகளின் பேரில் மதிப்பிடுவதற்கு மின்னணு போர் உருவகப்படுத்துதல்களை ஒருங்கிணைக்கின்றன.   2025 – ம் ஆண்டு மே 27 – ம் தேதி, இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாபினா கள துப்பாக்கிச் சூடு தளங்களுக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளை மதிப்பாய்வு செய்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடினார்.

உள்நாட்டு திறன் மேம்பாட்டை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த சோதனை முயற்சிகளில் இடம்பெற்றுள்ளன. “மாற்றத்திற்கான தசாப்தம்” என்ற இந்திய இராணுவத்தின் திட்டமிடல் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த சோதனைகள் ஒரு குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைவதைக் குறிக்கின்றன. மேலும் அதிகரித்து வரும் போர்க்களத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த சோதனைகள்  வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்திற்கும் உள்நாட்டு ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் வகையில், ஏராளமான பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களும் இந்த சோதனைகளில் பங்கேற்கின்றன.

Leave a Reply