லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ‘மா பாரதி’க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.
இன்றைய நிகழ்வு அவரது தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளதாகவும், அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதையும், டாடியா மற்றும் சத்னாவிற்கு விமான போக்குவரத்து இணைப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்றும், வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் பெயரைக் கேட்டதும் ஆழ்ந்த மரியாதை செலுத்திய திரு. நரேந்திர மோடி, அவரது குறிப்பிடத்தக்க ஆளுமையை விவரிப்பதற்கு வார்த்தைகள் போதாது என்று கூறினார். தேவி அஹில்யாபாய் அவரது விருப்பம் மற்றும் உறுதிப்பாட்டின் வலிமையைக் குறிப்பதாக உள்ளது என்றும், பாதகமான சூழ்ல்கள் இருந்த போதிலும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அடைய முடியும் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இரண்டரை முதல் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒடுக்குமுறையால் நாடு கட்டப்பட்டிருந்தபோது, தலைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கும் அளவுக்கு ஆழமான அசாதாரண சாதனைகளைப் படைத்தது எளிதான செயல் அல்ல என்பதை திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
லோகமாதா அஹில்யாபாய் ஹோல்கர் தெய்வீக சேவையையும் மக்கள் சேவையையும் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை என்பதை எடுத்துரைத்த பிரதமர், அவர் எப்போதும் தன்னுடன் ஒரு சிவலிங்கத்தை எடுத்துச் செல்வது குறித்து அறியப்பட்டதாகக் குறிப்பிட்டார். இது அவரது ஆழ்ந்த பக்தி நிலையைக் குறிப்பதாக உள்ளது. அவரது காலத்தில் உள்ள சவால்கள் குறித்த சிந்தனையுடன் பேசிய அவர், அத்தகைய சகாப்தத்தில் ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது முள் கிரீடம் அணிவதற்குச் சமமானது என்று தெரிவித்தார். இருப்பினும், லோகமாதா அஹில்யாபாய் தனது மாநிலத்தின் வளமைக்கு ஒரு புதிய பாதையை வகுத்தார். ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். “லோகமாதா அஹில்யாபாய் இந்தியப் பாரம்பரியத்தின் சிறந்த பாதுகாவலர்” என்று திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார். நாட்டின் கலாச்சாரம், கோயில்கள், புனித யாத்திரை செல்லும் தலங்கள் தாக்குதலுக்கு உள்ளான தருணத்தில், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகக் பிரததமர் குறிப்பிட்டார். காசி விஸ்வநாதர் உட்பட நாடு முழுவதும் ஏராளமான கோயில்களை மீட்டெடுப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை திரு நரேந்திர மோடி விரிவாக எடுத்துரைத்தார்.
லோகமாதா அஹில்யாபாய் விரிவான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட வாரணாசி நகரத்திலேயே சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது பெருமை அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். “மாதா அஹில்யாபாய் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் முன்மாதிரியான நிர்வாகத்தை செயல்படுத்தினார்” என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் ஆகியோரின் எண்ணிக்கைகை அதிகரிக்க அவர் ஏராளமான முயற்சிகளைத் தொடங்கினார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயம், வன விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்ட குடிசைத் தொழில்கள், கைவினைப்பொருட்களின் உற்பத்தியை அவர் ஊக்குவித்தார். வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சிறிய கால்வாய்களை உருவாக்கி, விரிவான நீர் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு, சுமார் 250-300 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான குளங்களை அவர் கட்டினார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், பயிர்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பருத்தி, மசாலா பொருட்களின் விவசாயத்தை அவர் ஊக்குவித்தார். பழங்குடியின சமூகங்கள், நாடோடி குழுக்களுக்கான தனது தொலைநோக்குப் பார்வையை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயன்பாடற்ற நிலத்தில் வேளாண் திட்டங்களை எளிதாக்கினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு என்ற பழங்குடியினப் பெண்ணின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக திரு நரேந்திர மோடி கூறினார். உலகப் புகழ்பெற்ற மகேஸ்வரி புடவைகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவி, நாட்டின் நெசவாளர்களுக்கு கணிசமாக பயனளிக்கும் வகையில், ஜவுளித் துறைக்கு தேவி அஹில்யாபாயின் பங்களிப்பு அளப்பரியது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். குஜராத் மாநிலம் ஜுனாகரிலிருந்து சில சேலை நெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களை 250-300 ஆண்டுகளுக்கு முன்பு தேவி அஹில்யாபாய் இதே தொழிலைத் தொடங்க அழைத்ததாக அவர் கூறினார். “பெண்கள் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது, பெண்களின் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் விதவைகளின் மறுமணத்தை ஆதரிப்பது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தங்களுக்காக தேவி அஹில்யாபாய் ஹோல்கர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்றும், அவரது காலத்தில் விவாதிப்பதற்குக் கூட கடினமாக இருந்த பிரச்சினைகள் இவை” என்று திரு மோடி சுட்டிக் காட்டினார். சமூகங்களில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், தேவி அஹில்யாபாய் இந்த முற்போக்கான சீர்திருத்தங்களை வலுவாக ஆதரித்தார் என்று அவர் தெரிவித்தார்.
மால்வா இராணுவத்தில் ஒரு சிறப்பு பெண்கள் பிரிவை அவர் உருவாக்கியதுடன், கிராமங்களில் பெண்கள் பாதுகாப்பு குழுக்களையும் நிறுவி, அவர்களது பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் போன்ற நடவடிக்கைகளை உறுதி செய்தார். “நாட்டைக் கட்டமைப்பதில் பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் அடையாளமாக மாதா அஹில்யாபாய் திகழ்கிறார்” என்று கூறிய பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தி, அனைவருக்கும் அவரது தொடர் ஆசிகள் கிடைக்க பிரார்த்தனை செய்தார். தாம் பெற்ற அனைத்தும் மக்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் என்றும், அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள அவரது கூற்றை நினைவு கூர்ந்த பிரதமர், மத்திய அரசு அவரது மாண்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாகவும், ‘நாகரிக் தேவோ பவ’ என்ற கொள்கையை ஆட்சியின் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் முன்னேற்றத்தின் மையமாகக் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஒவ்வொரு அரசின் முயற்சிகளும் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.
திவாஹர்