பாரம்பரிய மருத்துவத் துறையில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று புதுதில்லியில் உள்ள ஆயுஷ் பவனில் ஆயுஷ் சுரக்ஷா இணையதளத்தை தொடங்கி வைத்தார். ஆயுஷ் பிரிவை வெளிப்படைத் தன்மையுடன் மேம்படுத்தும் அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ஆயுஷ்சுரக்ஷா இணையதளம் தொடங்குவதன் மூலம், மக்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் ஆயுஷ் அமைப்புகளின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தீவிர பங்கேற்பாளர்களாக மாறுவதற்கு அதிகாரம் பெறுவதாகக் கூறினார். இந்தத் தளம் தவறான விளம்பரங்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்படும் கண்காணிப்புக் கோபுரமாகச் செயல்படும் என்றும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தயாரிப்புகள் மட்டுமே மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பிற்கான அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஆயுஷ் சுரக்ஷா இணையதளம் பிரதிபலிக்கிறது.
திவாஹர்