மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஐஐடி மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட ‘பாரத் முன்னறிவிப்பு அமைப்பு’ ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

மத்திய புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளில் ஒன்றான பாரத் முன்னறிவிப்பு அமைப்பை அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்தியா தனது பொருளாதாரத்தில் 4வது இடத்தை எட்டி, முதலிடத்திற்கு முன்னேற எதிர்நோக்கி இருக்கும் வேளையில், சாத்தியமான இழப்புகளைக் குறைப்பதன் மூலமும், அதே நேரத்தில் சாத்தியமான ஆதாயங்களைச் சேர்ப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்த முன்னறிவிப்பு அமைப்பின் துல்லிய நோக்கமாகும் என்றார்.

புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பு துல்லியத் தன்மையை, 12 கி.மீட்டரிலிருந்து 6 கி.மீட்டராக உயர்த்தி, ஒவ்வொரு கிராமமும் மிகவும் துல்லியமான மற்றும் இருப்பிடம் சார்ந்த முன்னறிவிப்புகளை பெற உதவுகிறது என்றார். இந்த முன்னேற்றம் இந்தியாவின் வானிலை சேவைகளில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது, தன்னிறைவடைந்த பாரதம் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் முயற்சிகளின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

வானிலை முன்னறிவிப்பில் இந்த உள்நாட்டு முன்னேற்றம் உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறிய நமது உயர்வுக்கு இது ஒரு பெருமையான சான்றாகும், மேலும் அதிநவீன, தன்னம்பிக்கை கொண்ட அறிவியல் தீர்வுகளை உருவாக்கும் நமது திறன் நாட்டின் தலைசிறந்த படைப்பில் மற்றொரு மைல்கல் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரதத்தின் முன்னறிவிப்பு முறையை நான்கு பெண் விஞ்ஞானிகள் வழிநடத்தி வருவதாகவும், இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘மகளிர் சக்தி’ என்ற தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். “அறிவியல் அமைச்சகங்கள் இனி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை, அவர்களால் நாம் அதிகாரம் பெறுகிறோம்” என்றும் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Leave a Reply