மதுபனி மற்றும் கோண்ட் கலைக் கலைஞர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் கலைஞர்கள் குழு ஒன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 26, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தது. இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்கள் – கலா உத்சவ் நிகழ்வில் அவற்றின் அசல் வடிவங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கலா உத்சவ், தலைமுறை தலைமுறையாக பல்வேறு கலை வடிவங்களைத் தொடர்ந்து வரும் இந்தியாவின் நாட்டுப்புற, பழங்குடி மற்றும் பாரம்பரிய கலைஞர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு தளத்தையும் வழங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் கோண்ட் கலை மற்றும் பீகாரின் மதுபனி கலையின் கலைஞர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டத்தின் கீழ் மே 20 முதல் 27, 2025 வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியுள்ளனர். அவர்களில் மதுபனி கலைஞர்கள் – சாந்தி தேவி, அம்பிகா தேவி, மனிஷா ஜா, பிரித்தி கர்ன், ரஞ்சன் பாஸ்வான், சாந்தி தேவி, ஊர்மிளா தேவி, ஷ்ரவன் பாஸ்வான், குமாரி நளினி ஷா மற்றும் மோதி கர்ன் மற்றும் கோண்ட் கலைஞர்கள் – துர்காபாய் வியம், சுபாஷ் வியம், நான்குசியா ஷியாம், ராம் சிங் ஊர்வேதி, ராம் சிங் ஊர்வேதி, ஜப்பன் சிங் ஊர்வேதி ஷ்யாம் துர்வே ஆகியோர் ஆவர்.

அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்த போது உருவாக்கப்பட்ட ஓவியங்களை குடியரசுத் தலைவர் நேரில் பார்த்தார். இந்தியாவின் முக்கியமான பாரம்பரிய கலை வடிவங்களுக்கு அவர்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால கலை முயற்சியில் வெற்றிபெற வாழ்த்தினார்.

Leave a Reply