சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டலு மலையில் (கேஜிஹெச்) நக்சலைட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், ‘நக்சலைட் இல்லாத இந்தியா’ என்ற உறுதிப்பாட்டில் ஒரு வரலாற்று வெற்றியை அடைந்த பாதுகாப்புப் படையினர், 31 நக்சலைட்டுகளைக் கொன்றனர்.

‘நக்சல் இல்லாத இந்தியா’ என்ற உறுதிப்பாட்டில் வரலாற்று வெற்றியை அடைந்து, சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டலு மலையில் (கேஜிஹெச்) நக்சல்வாதத்திற்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் 31 நக்சல்களைக் கொன்றுள்ளனர். மத்திய உள்துறை மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சமூக ஊடக எக்ஸ் தளத்தில், ஒரு காலத்தில் சிவப்பு பயங்கரவாதத்தால் ஆளப்பட்ட கர்ரேகுட்டலு மலை, இப்போது பெருமையுடன் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்திருப்பதாகக் கூறினார். கர்ரேகுட்டலு மலை பிஎல்ஜிஏ பட்டாலியன் 1,  சிஆர்சி போன்ற முக்கிய நக்சல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த தலைமையகமாக இருந்தது, அங்கு நக்சல் பயிற்சியுடன் உத்திகளை வகுத்தல் மற்றும் ஆயுதங்களை உருவாக்கும் செயல்பாடுகள் ஆகியவை நடைபெற்றன. நமது பாதுகாப்புப் படையினர் இந்த மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை வெறும் 21 நாட்களில் முடித்ததாகவும், இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரிடையே எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திரு ஷா கூறினார். மோசமான வானிலையிலும், கரடுமுரடான மலைப்பகுதியிலும் நக்சலைட்டுகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட சிஆர்பிஎஃப், எஸ்டிஎஃப் மற்றும் டிஆர்ஜி பணியாளர்களை உள்துறை அமைச்சர் பாராட்டினார். மேலும், நாடு முழுவதும் அவர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், நக்சலிசத்தை வேரிலிருந்தே ஒழிக்க நாம் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் கூறினார். மார்ச் 31, 2026க்குள் இந்தியா நக்சலைட் இல்லாத நாடாக மாறும் என்று அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) தலைமை இயக்குநர் திரு ஞானேந்திர பிரதாப் சிங், சத்தீஸ்கர் காவல்துறை தலைமை இயக்குநர்  திரு அருண் தேவ் கௌதம் மற்றும் சத்தீஸ்கர் காவல்துறையின் துணை தலைமை இயக்குநர் (நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள்) ஆகியோர் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த நடவடிக்கை குறித்த விரிவான தகவல்களை வழங்கினர். சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படைப் படைகள், சீருடையில் இருந்த 16 பெண் நக்சலைட்டுகள் உட்பட 31 சீருடை அணிந்த நக்சலைட்டுகளின் உடல்களையும், சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள நக்சலைட்டுகளின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கர்ரேகுட்டலு மலையில் 21 நாட்கள் நடந்த 21 என்கவுண்டர்களுக்குப் பிறகு 35 ஆயுதங்களையும் மீட்டன. இதுவரை, 28 நக்சலைட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21, 2025 முதல் மே 11, 2025 வரை நடந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் தடைசெய்யப்பட்ட, சட்டவிரோதமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமேந்திய நக்சல் அமைப்பான பிஎல்ஜிஏ பட்டாலியன், சிஆர்சி அமைப்பு மற்றும் தெலங்கானா மாநிலக் குழுவின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply