1. ஹரியானா, தில்லி தேசிய தலைநகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலையிலான அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தேர்தல் பதிவு அதிகாரிகள் ஆகியோருக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
2. மொத்தம் 371 அடிப்படை நிலையில் உள்ள தேர்தல் அதிகாரிகள் (பீகாரில் இருந்து 306 வாக்குச்சாவடி நிலையிலான அதிகாரிகள், ஹரியானாவிலிருந்து 30 தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலையிலான மேற்பார்வையாளர்கள், தேசியத் தலைநகர் தில்லியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலிருந்து 35 தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலையிலான மேற்பார்வையாளர்கள்) இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றனர். தற்போதைய தொகுதி உட்பட, 2,600-க்கும் மேற்பட்ட கள அதிகாரிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புதுதில்லியில் கடந்த இரண்டு மாதங்களில் நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்றுள்ளனர்.
3. இந்த பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், இல்லந்தோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் போது, வாக்குச்சாவடி நிலையிலான அதிகாரிகளின் செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில், அவர்களுக்கு விரைவில் நிலையான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கூறினார். இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள பிற வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள், 1961 மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களின்படி கண்டிப்பாக செயல்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வலிறுத்தியுள்ளார்.
4. வாக்காளர் பதிவு, படிவங்களைக் கையாளுதல், தேர்தல் நடைமுறைகளை கள அளவில் செயல்படுத்துதல் போன்றவற்றில் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளின் நடைமுறை சார்ந்த புரிதலை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில / யூனியன் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரின் வாயிலாக முறையே 1950 – ம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் பிரிவு 24(a) – ன் கீழ் மாவட்ட ஆட்சியர் / நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பிரிவு 24(b) – ன் கீழ் வெளியிடப்படும் நடைமுறைகளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடுகள் தொடர்பான விதிகள் குறித்து பயிற்சியில் பங்கேற்கும் அதிகாரிகள் அறிந்திருப்பார்கள்.5. 2025 – ம் ஆண்டு ஜனவரி 6-10 – ம் தேதிகள் வரை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான பயிற்சியை முடிந்த பிறகு பீகார், ஹரியானா மற்றும் தலைநகர் தில்லியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியிலிருந்து பெறப்படும் எந்தவொரு மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளலாம்.
6. இந்தப் பயிற்சித் திட்டத்தின் பாடத்திட்டத்தில் கலந்துரையாடல்களுக்கான அமர்வுகள், அதில் பங்குபெறும் பாத்திரங்களின் ஒத்திகை நிகழ்வுகள், வீடு வீடாகச் சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளை உருவகப்படுத்துதல், வழக்கு தொடர்பான ஆய்வுகள் மற்றும் படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை நிரப்புவதற்கான நடைமுறை பயிற்சிகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, இந்த பயிற்சியில் பங்கேற்கும் அதிகாரிகள் வாக்காளர் உதவி மையச் செயலி மற்றும் தகவல் தொழிநுட்பக்கக் கருவிகள் குறித்த நடைமுறை பயிற்சியையும் பெறுவர். அதிகாரிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவுகள் உட்பட வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் குறித்தத் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் மற்றும் பயிற்சியும் வழங்கப்படும்.
திவாஹர்