இந்தியா – பூடான் இடையேயான 6-வது சுங்க கூட்டுக் குழுக் கூட்டம் 2025 ஏப்ரல் 24, 25 தேதிகளில் பூடானின் திம்புவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சிறப்புச் செயலாளரும், உறுப்பினருமான திரு சுர்ஜித் புஜாபாலும் பூடான் அரசின் நிதி அமைச்சகத்தின் சுங்கத் துறைத் தலைமை இயக்குநர் திரு சோனம் ஜம்ட்ஷோவும் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
பூட்டானின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 80 சதவீத இறக்குமதி, ஏற்றுமதி நாடாக உள்ள இந்தியா அந்நாட்டின் சிறந்த வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. பூட்டான் நிலத்தால் சூழப்பட்ட நாடு என்பதால் நில சுங்க நிலையங்கள் மூலம் பூடானுடனான வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த்தாக உள்ளது. சுங்க நடைமுறைகளை மறுவரையறை செய்தல், சுங்க ஒத்துழைப்பை ஊக்குவித்தல், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப எல்லை தாண்டிய வர்த்தக வசதி ஆகியவை தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்தியா-பூடான் கூட்டு சுங்கக் குழு கூட்டங்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் 6 மற்றும் அசாமில் 4 என இந்தியா-பூட்டான் எல்லையில் 10 நில சுங்க நிலையங்கள் உள்ளன.
திவாஹர்