தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்ற மக்களுடன் நீண்ட வரிசையில் நின்றார். ரூ.4000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதை பெற தான் வந்ததாக ராகுல் காந்தி கூறினார்.
பணத்தை மாற்ற மக்கள் நீண்ட கியூக்களில் நிற்பதால், கடுமையான சிரமத்தை மக்கள் சந்திக்கிறார்கள். அந்த கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளவே நானும் வந்தேன்., மக்களின் சிரமத்தை இப்போது என்னாலும் உணர முடிகிறது. மோதி அரசும் இந்த கஷ்டத்தை உணர வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
-எஸ்.சதிஸ் சர்மா.