பாதிரியார்களின் பாலியல் குற்றங்களுக்கு ஆயர்களே முழு பொறுப்பேற்க வேண்டும்: கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் ஆணை!

கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்.

கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்.

சின்னஞ்சிறு குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொள்ளும் பாதிரியார்களிடம் இருந்து குழந்தைகளை ஆயர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில், அந்த குற்றங்களுக்கு ஆயர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ், உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க ஆயர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

அலட்சியம் காட்டினால் ஆயர்கள் நீக்கப்படுவதற்கு திருச்சபை சட்டம் ஏற்கனவே அனுமதிக்கிறது என்பதை போப் பிரான்சிஸ் இந்த ஆணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், பதவி நீக்குவதற்கு வழிகோலும் ‘ஆழமான காரணத்திற்கு‘ மேலும், துல்லியமான வரையறை இருக்க வேண்டுமென விரும்புவதாக இந்த ஆணையில் போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com