சாலை விதியை மதிக்காத தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்!  

ராபி ரிச்சர்ட் 1ராபி ரிச்சர்ட்2quincy police.1

ராபி ரிச்சர்ட்

அமெரிக்காவில் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் மைக்கேல் ரிச்சர்ட், இவரது மகன் பெயர் ராபி ரிச்சர்ட் (வயது6), இவர்கள் இருவரும் 28.05.2016 அன்று  காரில் வெளியே சென்றனர். அப்போது சிக்னலில் ரெட் லைட் எரிந்து கொண்டிருந்தது. மைக்கேல் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனை பார்த்த சிறுவன் ராபி, போக்குவரத்து விதியை மீறிவிட்டீர்களே என்று கேட்டான். அப்போது அவர் கூலாக இது பரவாயில்லை என்று கூறினார்.

வீட்டிற்கு வந்த ராபி உடனே 911 என்ற எண்ணுக்கு போன் செய்து தனது தந்தை போக்குவரத்து விதியை மீறியதாக போலீசிடம் புகார் தெரிவித்தான். போனை தந்தையிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினர். அப்போது சிறுவன் போனை தனது தந்தையிடம் அளித்தான். அப்போது ஹலோ சொன்ன போது மறுமுனையில் பேசியவர் க்வின்சி போலீசில் இருந்து பேசுகிறோம் என்று கூறியதை கேட்டு சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

ராபி ரிச்சர்ட் தனது சகோதரியுடன்.

ராபி ரிச்சர்ட் தனது சகோதரியுடன்.

போக்குவரத்து விதியை மீறியது தனது தந்தை என்றும் பாராமல், போலீசில் புகார் அளித்த 6 வயது சிறுவனின் துணிச்சலை க்வின்சி போலீசார் பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளனர்.

ராபி ரிச்சர்ட் செயல் வரவேற்றக்கதக்கது என்று, அந்த சிறுவனின் சகோதரியும் கூறியுள்ளார்.

 -ஆர்.மார்ஷல்.